2025 ஆம் ஆண்டில் நகரசபையில் கடமைகளைப் பொறுப்பேற்றல்

2025 ஆம் ஆண்டிற்கான கடமைகளை நகரசபையில் பொறுப்பேற்கும் நிகழ்வு காலை 9 மணியளவில் நகரசபையின் செயலாளர் தலைமையில் தேசியக் கொடியேற்றத்துடன் “ கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Srilanka) என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் சத்தியப்பிரமானம் மேற்கொண்டு முதல் நாள் கடமைகளை பொறுப்பேற்றதுடன் மங்கள வளக்கேற்றலுடன் ஒன்றுகூடல் நிகழ்வு செயலாளர் மற்றும் நலன்புரிச்சங்க தலைவரின் தலைமையில் இடம்பெற்றதுடன் செயலாளர் அவர்களினால் சில அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் திரு. செழியன் அவர்களால் 2025 ஆம் ஆண்டில் குதுாகலமாக இனி வரும் எல்லா செயற்பாடுகளையும் திறமையாகவும் சிறப்பாகவும் மேலும் எல்லோரது ஒத்துழைப்புடனும் சிறப்பாக அமைய வேண்டும் என கூறி நலன்புரிச் சங்கத்தினால் பரிசுப்பொருள் கொடுத்த மகிழ்ச்சியான தருணங்கள்………..

ஒளி விழா – 2024

மன்னார் நகரசபையில் சமயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.அந்த வகையில் கறிஸ்தவர்களின் யேசு பாலன் பிறப்பை கொண்டாடும் முகமாக ஒளி விழாவானது 27.12.2024 அன்று நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. முதலில் அருட் தந்தையின் திருப்பலி ஒப்புக் கொடுத்தலுடன் ஒளி விழாவானது ஆரம்பமானது அதனைத் தொடர்ந்து  நகரசபை கணக்காளர் அவர்களினால் சிறப்புரை வழங்கப்பட்டது. பின்பு அருட்தந்தை அவர்களினால் ஆசி உரை வழங்கப்பட்டது. தொடர்ந்து நகரசபை  உத்தியோகத்தர்களது பாடல், முன்பள்ளி மாணவர்களின் நாடகம், நடனம் மற்றும் பேச்சு போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.  நிகழ்வை வழங்கிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி ஊக்குவித்தனர். தொடர்ந்து நகரசபையின் உத்தியோகத்தர் தர்சினி அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டு பிற்பகல் 12.30 மணியளவில் இவ் விழாவானது இனிதே நிறைவு பெற்றது.

மன்னார் நகரசபையின் பண்டிகைக்கால சந்தைக்கடை – 2024

மன்னார் நகரசபையில் 2024 ஆம் ஆண்டிற்கான பண்டிகைக்கால சந்தைக்கடைக்கான விண்ணப்பப்படிவங்கள் 18.12.2024- 19.12.2024 மதியம் 1.00 மணிவரை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் கடைகளின் எல்லை , வரைபடங்கள் மூலம் கீழே காட்டப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபைக்குட்பட்ட பின்தங்கிய கிராமங்களில்வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள்,பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்களுக்கான போசாக்கு உணவுப்பொதி வழங்கும் நிகழ்வு – 2024

  கர்ப்பிணி தாய்மார், பாலுாட்டும் தாய்மார் மற்றும் முதியோருக்கான உணவுப்பொதி வழங்கல் – 2024

மன்னார் நகரசபையின் நிதி ஒதுக்கீட்டில்  ஒவ்வொருவருடமும் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலுாட்டும் தாய்மாருக்கான போசாக்கு உணவுப்பொதி வழங்குவது தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் இம்முறையும் கர்ப்பிணித் தாய்மார்,பாலுாட்டும் தாய்மாருக்கு மாத்திரமின்றி இம்முறை கஸ்ரப்பட்ட ஆரவற்ற முதியோருக்கும் போசாக்கு உணவுப்பொதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வு செயலாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிராந்திய உள்ளுராட்சி அலுவலகத்திலிருந்து சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், நகரசபை கணக்காளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர். நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வின் பதிவுகள் சில………

பெங்கல் புயல் அனர்த்த சூழ்நிலையில் பணிபுரிந்த நகரசபை ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு – 04.12.2024

அண்மையில் ஏற்பட்ட பெங்கல் புயல் அனர்த்த நிலைமையில் போது சிறப்பாக களப்பணியாற்றிய உள்ளுராட்சி மன்ற ஊழியர்களை கௌவரவிக்கும் முகமாக வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் (04.12.2024) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வின் போது மன்னார் நகரசபை செயலாளர் தலைமையில் வெள்ள அனர்த்த பணிகளில் களப்பணியற்றிய 14 ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வில் வட மாகாண கௌரவ ஆளுனர் பிரதம விருந்தினராகவும், வட மாகாண பிரதம செயலாளர் சிறப்பு விருந்தினராகவும் எமது மாவட்ட அரச அதிபர், ஏனைய மாவட்ட அரச அதிபர்கள், எமது உள்ளுராட்சி உதவி ஆணையாளர், ஏனைய மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் யாழ். மாநகர ஆணையாளர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மன்னார் நகரசபை ஊழியர்களுக்கு
வட மாகாண கௌரவ ஆளுனரால் மெச்சுரை வழங்கப்பட்ட போது…

அனர்த்த கால நிலைக்கு பின்னரான செயற்பாடுகள் – 2024

மன்னார் நகர சபை நிர்வாக எல்லைகுட்பட்ட கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பாடசாலைகள், பொதுநோக்கு மண்டபங்கள், ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டு தற்போது மக்கள் மீள வீடு திரும்பிள்ளனர்.
மன்னார் மாவட்ட அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாடசாலைகள், பொதுநோக்கு மண்டபங்கள் மீள பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் மன்னார் நகரசபை செயலாளரின் பணிப்பின் பேரில் நகரசபை ஊழியர்களினால் திண்மக்கழிவகற்றல் மற்றும் மன்னார் MOH,PHI ஒத்துழைப்புடன் சுகாதார முறையில் தொற்று நீக்கி எமது நகரசபை ஊழியர்கள் மூலம் செய்யப்படும் போது….

CA Sri Lanka , APFA ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைக்கான மதிப்பீட்டுப் போட்டி

இலங்கை பொது நிதி கணக்கியல் சங்கத்தினால் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது வழங்குவதற்காக நாடளவில் உள்ள திணைக்களங்களுக்கு இடையிலான நடத்தப்பட்ட போட்டியில் 2023 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்டு 02.12.2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2024” நிகழ்வில் மன்னார் நகர சபைக்கு சிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. இவ்விருதை பெறுவதற்காக கடந்த ஆண்டு அயராது பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் இவ்வறிக்கையினை திறம்பட உருவாக்கிய எமது உத்தியோகத்தா்களுக்கும் சபையின் சாா்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கேள்வி அறிவித்தல் – 2024

கேள்வி அறிவித்தல் – மன்னார் நகரசபை
பாவனையற்ற வாகனங்களினை இரும்பு விலைக்கு விற்பனை செய்தல்

கேள்வி இல :- NP/14/42/(2)/VEH/AUC/2024
மன்னார் நகரசபையில் பாவனையற்று வாகனப்பதிவு இரத்து செய்யப்பட்ட பின்வரும் வாகனங்களை இரும்பு விலைக்கு விற்பனை செய்வதற்காக ஆர்வமுள்ள கேள்விதாரர்களிடமிருந்து பொறியிடப்பட்ட கேள்வி மனுப்பத்திரங்கள் கோரப்படுகின்றன.

CamScanner 11-08-2024 09.32

கேள்வி அறிவித்தல் – 2025

கேள்வி அறிவித்தல் – 2025
மன்னார் நகரசபைக்குச் சொந்தமான கீழ் காணும் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விகள் கோரப்படுகின்றன.
கேள்விப்பத்திரம் வழங்கும் திகதி – 01.11.1014/ 21.11.2024
பி.ப – 12.00 மணி வரை
கேள்வி அறிவித்தல்

அங்குரார்ப்பண நிகழ்வு – 2024

அங்குரார்ப்பண நிகழ்வு – 2024
மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் அருகில் நகர கடற்கரை பூங்கா அமைப்பதற்கு அங்குரார்ப்பண நிகழ்வு 21.10.2024 இன்றைய தினம் இடம்பெற்றது. குறித்த நிகழ்வினை மன்னார் நகரசபை செயலாளர் திரு.எஸ்.லோகேஸ்வரம் தலைமையில் நடைபெற்றது. குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட திரு. கே. கனகேஸ்வரம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் உடன் மேஜர் ஜெனரல் RSP ராஜபக்ச இராணுவ கட்டளை தளபதியின் பங்குபற்றலுடன் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் முதலில் நகர கடற்கரை பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் வைக்கப்பட்டு கடற்கரை பூங்காவிற்கான திரைச்சீலை நீக்கப்பட்டதுடன் நிர்மான பணி தொடர்பான விபரங்கள் UDA-NP பணிப்பாளர் சார்பாக தெளிவுபடுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மரக்கன்றுகள் பங்கு தந்தை, அரச அதிபர், மேஜர் ஜெனரல் இராணுவ கட்டளை தளபதி, மற்றும் Director, UDA-NP நடுகையும் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், நகர சபையின் கணக்காளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் பிரதிநிதி, சிசேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச சபைகளின் செயலாளர்கள், E.E, RDA, உதவிப்பணிப்பாளர், Wildlife, OIC,CEA, Mannar, OIC. CCD, Mannar, உ.உ.ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகரிகள்,மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.