உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான மன்னார் நகரசபையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களது ஆரோக்கியத்தை பேணும் வகையில் போசாக்கு உணவுத்திட்டம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதை தொன்று தொட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது . அதாவது மன்னார் மாவட்டத்தில் நகரசபை எல்லைக்குட்பட்ட மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இவ் போசாக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது.மற்றும் இவ் உணவுத்திட்டத்தில் முதியோர்களும் உள்வாங்கப்படுவதுடன் இத் திட்டம் அவர்களது வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான போசாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. கிட்டத்தட்ட 180 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கி அவர்களது ஆரோக்கிய வளர்ச்சிக்கு நகரசபை தங்களால் முடிந்தளவு சேவை ஆற்றி வருகின்றது. அதுமட்டுமன்றி இனிவருங்காலங்களிலும் இதனுடைய செயற்பாடுகள் உச்ச அளவில் அடையும் என்பதில் ஜயமில்லை.

மன்னார் நகரசபையின் செயலாளர் ,உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் செயற்பாட்டில் தீயணைப்பு வாகனம் இயங்கும் நிலை
மன்னார் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் பிரதேச சபையிடமிருந்து மன்னார் நகரசபைக்கு வழங்கப்பட்ட தீயணைப்பு வாகனம் தற்போது புணரமைக்கப்பட்டு திருத்தப்பட்டு இயங்கும் நிலையில் உள்ளது.இது தொடர்பாக எமது சபை ஊழியர்களுக்கு ஆரம்ப பயிற்சி வழங்குவதற்கு மன்னார் நகரசபையின் செயலாளரின் வேண்டுகோளுக்கமைய யாழ் மாநகரசபை தீ அணைப்பு பிரிவின் அனுபவம் வாய்ந்த உத்தியோகத்தர்களினால் பயிற்சிகள் வழங்கப்பட்டு மன்னார் நகரசபையின் நீண்ட நாள் தேவைகளில் ஒன்று பூர்த்தி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.


மன்னார் நகரசபைக்குச் சொந்தமான பஸ் நிலைய வளாகத்தினுள் அமையப்பெற்றுள்ள கடைகளினை (கடைகள்-07) நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்விகள் கோரப்பட்டுள்ளது இது தொடர்பாக 2024.01.19 ம் திகதிய தினக்குரல் பத்திரிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தற்காலிக பண்டிகைக்கால கடைகளுக்கான படிவங்கள்2023.12.17ம் திகதியிலிருந்து 18ம்திகதிமதியம்12.30 மணியளவில் நிறைவுபெற்றுஅதற்கான கடைகள் வழங்கும் நிகழ்வு 2023.12.19ம் திகதி நண்பகல் 2;30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு கடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.


தற்காலிக பண்டிகைக்கால கடைகளுக்கான படிவங்கள்2023.12.17ம் திகதியிலிருந்து 18ம்திகதிமதியம்12.30 மணியளவில் நிறைவுபெற்றுஅதற்கான கடைகள் வழங்கும் நிகழ்வு 2023.12.19ம் திகதி நண்பகல் 2;30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு கடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெறும்