உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டம் – 2024

உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டம் - 2024

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மன்னார் நகரசபையினால் பல்வேறான நிகழ்ச்சித் திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் நகரசபை எல்லைக்குட்பட்ட காணிகளை துப்பரவாக்கி அதனை எல்லைப்படுத்தியமை மற்றும் நீர் நிலைகளின் பாதுகாப்பை மேம்படுத்த மன்னார் எல்லைக்குள் காணப்படும் குளங்களை துப்பரவு செய்து அதனை அழகாக்கியமை,பல்வகை உயிர்களின் நன்மை கருதி பொது இடங்களில் வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை அப்புறப்படுத்தியமை அதுமட்டுமன்றி பொலித்தீன் பாவனையை குறைக்க பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமை மற்றும் பசுமை மிக்க அழகான கிராமத்தை உருவாக்கும் பொருட்டு விளையாட்டு மைதானம்,சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளில் மர நடுகை செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்கால சந்ததிக்கு  நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்க வழிகோலியமை இச்செயற்பாட்டிற்கு மாணவர்களின் பங்களிப்பும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் பதிவுகள் சில

             

இணையவெளியில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்டு நிகழும் வன்முறை/ துன்புறுத்தல்கள்

பால் நிலையை அடிப்படையாகக் கொண்டு இணையவெளியில் நிகழும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில்  காலத்திற்கேற்ற பிரச்சினைகளை ப் பிரதிநிதித்துவப்படுத்தி  அச்சிடப்பட்ட கார்ட்டூன்கள் இளம் சமூகத்தை  தீய வழியில் பயணிப்பதை இடைநிறுத்தி அவர்கள் சிந்தித்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க உறுதுணையாக அமைகின்றது.  

மன்னார் நகரசபையின் பொது நுாலகத்தில் இலவசமாக அங்கத்துவம் வழங்கல் – 2024

மன்னார் நகரசபையின் பொது நுாலகத்தில் இலவசமாக அங்கத்துவம் வழங்கும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது. எனவே ஆர்வம் உள்ள நலன் விரும்பிகள் மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் அதில் ஈடுபாடு கொண்டு தங்களது வாசிக்கும் செயற்றிறனை வளர்த்து சிறந்த வாசகர்களாக மாறுங்கள்.

 

 

LDSP திட்டத்தின் ஊடாக மன்னார் நகரசபையினால் கடைத்தொகுதி அமைப்பதற்குஅடிக்கல் நாட்டும் நிகழ்வு 06.05.2024 அன்று ஆரம்பிக்கப்பட்ட தருணங்கள்

LDSP திட்டத்தின் ஊடாக மன்னார் நகரசபையினால் கடைத்தொகுதி அமைப்பதற்கு இன்று (06.05.2024) அடி கல் வைக்கும் நிகழ்வு மன்னார் நகர சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது, குறித்த நிகழ்வை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் முதல் அடிக்கல் நாட்டப்பட்டு நிகழ்வு  ஆரம்பிக்கப்பட்டது,
குறித்த நிகழ்வில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், சபை நிர்வாக உத்தியோகத்தர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஒப்பந்தகாரர் கலந்து கொண்டனர்..
      

பூஜ்ஜியம் (zero) கழிவு தினம்

பூஜ்ஜியம் (zero) கழிவு தினத்தை முன்னிட்டு 30.03.2024 அன்று மன்னார் நகர சபையினால் மன்னார் பிரதான பாலம், மீன் சந்தை மற்றும் மரக்கறி சந்தை போன்ற இடங்கள் துப்புரவு செய்யும் தருணங்கள்......

கேள்வி அறிவித்தல் uppling of Type – II Soil (Hard Earth) சபை நிதி வேலைத்திட்டம் – 2024

கேள்வி அறிவித்தல் - suppling of Type - II Soil (Hard Earth)
சபை நிதி வேலைத்திட்டம் - 2024
மன்னார் பொது விளையாட்டு மைதானம் மற்றும் நவீன கடைத்தொகுதி அமைக்கப்பட்ட காணிக்கு Land Filling செய்வதற்கு Type II Soil - Hard Earth தேவைப்படுதால் வேலைக்கான கேள்வி அறிவித்தல் 08.04.2024ம் திகதிய
தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுடைய கேள்விதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பம் பெறும் திகதி – 08.04.2024 தொடக்கம் 22.04.2024- 2.00PM வரை (அலுவலக வேலை நாட்களில் காலை 09.00 மணிக்கும் 2.00 மணிக்கும்) பெற்றுக்கொள்ளலாம்.

இப்தார் நோன்பு திறத்தல் நிகழ்வு – 2024

இப்தார் நோன்பு திறத்தல் நிகழ்வு - 2024 மன்னார் நகரசபையின் நலன்புரிச்சங்க உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் 04.04.2024 அன்று இப்தார் (நோன்பு திறத்தல் ) நகழ்வு மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் செயலாளரின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து இந் நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.     

மன்னார் நகரசபையினால் முன்பள்ளி மாணவர்களுக்கு 01.03.2024ம் திகதி போசாக்கு துணை உணவு வழங்கப்பட்ட தருணங்கள் – 2024

மன்னார் நகரசபையினால் முன்பள்ளி மாணவர்களுக்கு 01.03.2024ம் திகதி போசாக்கு துணை உணவு வழங்கப்பட்ட தருணங்கள் - 2024 மன்னார் நகரசபையில் ஒவ்வொரு வருடமும் போசாக்கு வழங்கும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட முன்பள்ளி பாடசாலை  மாணவர்களுக்கு இம் முறையும் போசாக்கு துணை உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 01.03.2024ம் ஆண்டு பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களினால் சம்பிரதாயமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில்  நகரசபையின் செயலாளர், பிராந்திய உள்ளுராட்சி  ஆணையாளரின் அலுவலர் ,நகரசபை அலுவலர்கள் , முன்பள்ளி ஆசிரியர்கள்மற்றும் பெற்றோர்கள் ,நலன் விரும்பிகள் கலந்து இந் நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.      

பிஸாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமம்

பிஸாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமம்

பிஸாஸ்ரிக் கழிவுகளற்ற பசுமையான அழகான கிராமமாக மாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களால் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் மேறகொள்ளப்பட்டு மாணவர்களே மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு பக்க பாலமான செயற்பட்ட தருணங்கள்.

eCitizen Report Card

eCitizen Report Card

மன்னார் நகரசபையின் சேவைகள் தொடர்பான பொது மக்களிடம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இலத்திரனியல் குடிமக்கள் அட்டை என்ற தரவுக்கேற்ப மக்களிடம் பகுதியளவில் பெறப்பட்ட அபிப்பிராயங்கள் போடப்பட்டு காட்சிப்படுத்தி வளவாளர்களினால் விளங்கப்படுத்தப்பட்டது. இதனையும் ஆராய்ந்து நகரசபையின் குறித்த வளர்ச்சிக்கு பொதுமக்களாகிய தங்களின் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கமைய இனங்காணப்பட்ட விடயங்கள் 1. பொதுச்சேவை 2. பொதுச்சேவையுடன் வருமானத்தை செலுத்திய சேவை 3. பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளல் Model report_ Mannar UC(2)