உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டம் - 2024
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மன்னார் நகரசபையினால் பல்வேறான நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் நகரசபை எல்லைக்குட்பட்ட காணிகளை துப்பரவாக்கி அதனை எல்லைப்படுத்தியமை மற்றும் நீர் நிலைகளின் பாதுகாப்பை மேம்படுத்த மன்னார் எல்லைக்குள் காணப்படும் குளங்களை துப்பரவு செய்து அதனை அழகாக்கியமை,பல்வகை உயிர்களின் நன்மை கருதி பொது இடங்களில் வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை அப்புறப்படுத்தியமை அதுமட்டுமன்றி பொலித்தீன் பாவனையை குறைக்க பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமை மற்றும் பசுமை மிக்க அழகான கிராமத்தை உருவாக்கும் பொருட்டு விளையாட்டு மைதானம்,சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளில் மர நடுகை செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்கால சந்ததிக்கு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்க வழிகோலியமை இச்செயற்பாட்டிற்கு மாணவர்களின் பங்களிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் பதிவுகள் சில















































