செயற்பாட்டு கைநூல் பயிற்சிப்பட்டறை (Operation Manual)- 2024

மன்னார் நகரசபையில் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் மேற்கொள்வதற்காக  மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட 5 சபைகளுடனான பயிற்சிப்பட்டறை 14.10.2024 அன்று மன்னார் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. இச் செயற்பாடு கிளிநொச்சி முகாமைத்துவ பயிற்சி அலகினால் முன்னெடுக்கப்பட்டது. இச் செயற்பாட்டில் கட்டிட அனுமதி, குடிபுகு சான்றிதழ்,உப பிரிவிடல், ஆதனப்பெயர் மாற்றம்  போன்றன தொடர்பான முழுமையான விளக்கங்கள் வளவாளர்களால் முன்வைக்கப்பட்டது. பயிற்சிநெறியின் போது  

மன்னார் நகரசபை பொதுநூலகத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் – 2024

மன்னார் நகரசபையின் பொதுநூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இவ் வருடமும் நகரசபை செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய நகரசபை பொது நூலகத்தில் பள்ளிமுனையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கவிதை, பேச்சு மற்றும் சித்திரப் போட்டிகளும் சிரமதானப் பணிகளும் தேசிய வாசிப்பு தினத்தை முன்னிட்டு 12.10.2024 அன்று இடம்பெற்றது. இத்தகைய செயற்பாடுகளின் பதிகள் கீழே காட்டப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபையும் மன்னார் சமூக அபிவிருத்திக்கான ஒன்றியமும் இணைந்து நடாத்தும் உயர்தர மாணவர்களுக்கான வணிகக்கல்வி செயலமர்வு – 2024

மன்னார் நகரசபையும் மன்னார் சமூக அபிவிருத்திக்கான ஒன்றியமும் இணைந்து 2024 ஆம் ஆண்டிற்கான உயர்தர மாணவர்களுக்கான வணிகக்கல்வி செயலமர்வு 12.10.2024 அன்று நடைபெற்ற தருணங்கள்

Support the Cleanup Srilanka Project Implementation Focusing the World Cleanup Day – 28.09.2024

உள்ராட்சி மன்றங்களுள் ஒன்றான மன்னார் நகரசபையில் Cleanup Srilanka  என்னும் வேலைத்திட்டத்தினை குறித்த திகதியில் பல இடங்களில் மேற்கொண்டு இலங்கையின் சுத்தத்தை நகரசபை பிரபல்யப்படுத்தியுள்ளது. அந்த வகையில் மன்னார் நகரசபையில் கடமையாற்றுகின்ற உழியர்கள் நகரசபை எல்லைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் குறித்த செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். பிளாஸ்ரிக் , பொலித்தீன், வெற்றுப்போத்தல்கள் மற்றும் உக்கக்கூடிய . உக்கமுடியாத கழிவுகள் என அனைத்தையும் தரம்பிரித்து உரிய முறையில் அகற்றி நகரசபை கிராமங்கள் தூய்மையுடைய அழகிய கிராமமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. மன்னார் நகரசபையின் எல்லைக்குட்பட்ட பேரூந்து தரிப்பிடம், மீன் சந்தை, நகரசபைக் கடைத்தொகுதி மற்றும் கழிவு முகாமைத்துவ மையம் போன்ற இடங்களில் Cleanup Srilanka என்னும் வேலைத்திட்டத்தினை முன்நிறுத்தி சிரமதானப் பணிகள் மற்றும் பசுமையான கிராமமாக காட்சிப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி சிறுவர்களின் கேந்திர நிலையமான சிறுவர் பூங்கா போன்றனவும் தூய்மைப்படுத்தப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கும் முகமாக பச்சைப்பசேலன மரக்கன்றுகளை நட்டு அழகான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. Cleanup Srilankaஎன்ற குறித்த வேலைத்திட்டமானது 28.09.2024 அன்று சுமுகமான முறையில் ஆறு இடங்களில் நடைபெற்று மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் தூய்மையை நிலைநாட்டியுள்ளது. இச் செயற்பாடானது தனி ஒரு நாள் இல்லாது இனி வருங்காலங்களில் இதனை மாதத்திற்கு இரு தடவையேனும் இச் செயற்பாட்டை நகரசபை மேற்கொண்டு இலங்கையை ஊடநயnரி ளுசடையமெய ஆக பிரபல்யப்படுத்தும். நகரசபை பணியாளர்களினால் பேரூந்து நிலையம், கடைத்தொகுதி, சிறுவர் பூங்கா, மீன் சந்தை போன்ற இடங்களில் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை கீழ் வரும் புகைப்படங்களின் ஊடாக காணலாம்...    

சபை நிதி வேலைத்திட்டம் கேள்வி விலை கோரல்

1,சபை நிதி வேலைத்திட்டத்தில் மனங்கட்டுக்கொட்டு கிழக்கு வீதி வடிகால் அபிவிருத்தி 2.உப்புக்குளம் வடக்கு , நியுமூர்சிற் மற்றும் மன்னிமுனை வீதிகளுக்கான வடிகால்வாய்கள் அமைத்தல் 3.41,49 வீட்டுத்திட்டத்தில் concrete வீதி கட்டுமாணம் 4.தரவன்கோட்டை பிரதான வீதியில் concrete வீதி கட்டுமாணம் மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) போன்ற வேலைத்திட்டங்களிற்கான கேள்வி விலை கோரல் கோரப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். New Microsoft Word Document FB Work 2024       தகவல் நகரசபை, மன்னார்

வரவுசெலவுத்திட்டம் – 2025

மன்னார் நகரசபையின் 2025்ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் பின்வரும் திகதிகளில் மன்னார் நகரசபை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் பங்குபற்றலாம். ward level meeting time shedule  

மன்னார் நகரசபையினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு – 2024

மன்னார் நகரசபையினால் ஒவ்வொரு வருடமும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு பற்பல உதவிகளை செய்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இம்முறை நகரசபை எல்லைக்குட்பட்ட பின் தங்கிய நிலையில் உள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் , சேதனப்பசளை மற்றும் கன்றுகளை பராமரிக்க தேவையான பைகள் என்பன  வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வு 28.08.2024 அன்று காலை 10.30 மணியளவில் நகரசபை பிரதான மண்டபத்தில் நகரசபை செயலாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து  , பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் நிதி உதவியாளர் ஆகியோரால் வீட்டுத்தோட்ட கன்றுகள்  வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் இந் நிகழ்வு நிறைவடைந்தது. புகைப்படங்கள் சில        

பேசாலை துள்ளுகுடியிருப்பு பகுதியில் தீ அணைக்கப்பட்ட வேளை

மன்னார் பேசாலை துள்ளுகுடியிருப்பு கிராம பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அறிவித்தலுக்கு அமைவாக மன்னார் நகர சபை செயலாளரினால் தீ அணைப்புப் பிரிவினர்களை உரிய இடத்திற்கு அனுப்பி கிராமத்தின் பொதுமக்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் படையினரின் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட போது..

“சுவர்ணபுரவர” விருது நிகழ்வு – 2024

“சுவர்ணபுரவர” விருது நிகழ்வு - 2024
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிறன் மதிப்பீட்டின் (PERFECT 2.0) அடிப்படையில் எமது சபைக்கு 25.07.2024 அன்றைய தினம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மாண்புமிகு பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான சுவர்ணபுரவர விருது வழங்கும் நிகழ்வில் மன்னார் நகரசபை 7வது இடத்தை பெற்றுக்கொண்டது.
நாடு முழுவதுமுள்ள 276 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கட்டம் கட்டமாக நடத்தப்பட்ட சபைகளின் செயலாக்க மதிப்பீட்டின் அடிப்படையில் 41 நகரசபைகளில் மன்னார் நகரசபை 7வது இடத்தை தனதாக்கி “ஸ்வர்ணபுரவர” தேசிய விருது பெற்றுக்கொண்டது.
இவ் விருதை பெறுவதற்கு அயராது உழைத்து ஒத்துழைப்பை வழங்கிய நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மன்னார் நகர சபையுடன் எப்போதும் எமது சபையின் சட்டதிட்டங்களை மதித்துச் செயற்படுத்தும் பொது மக்கள் அனைவருக்கும் நகரசபை குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
செயலாளர்,
மன்னார் நகரசபை
    

உள்ளுர் உற்பத்திகளை farmtogate என்ற இணையத்தில் பதிவு செய்தல் – 2024

மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் மக்களுக்காக ஒரு சிறந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் மற்றும் வாடகைக்கு விடப்படும் விடயங்கள், உங்களால் வழங்கப்படும் சேவைகளை farmtogate என்ற இணையதளத்தின் மூலம் இலவசமான முறையில் பதிவு செய்து வாடிக்கையாளருடன் இணைந்து கொள்ள முடியும். இன்றே இணைந்திடுங்கள்.
எமது அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் உங்கள் சுயதொழில் தொடர்பான விபரங்களை வழங்கவும்.
தொடர்புகளுக்கு - 0232222285